search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி மேலாண்மை"

    காவிரி மேலாண்மை வாரியம் என்பதை ஆணையம் என மாற்றியதால் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #CauveryManagementBoard #Cauveryissue #Vaiko

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி தேர்தலுக்கு பின்னர் உருவாகும் கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தால் ஆட்சி அமைக்கலாம்.

    ஆனால் கர்நாடக கவர்னர் அவ்வாறு செய்யாமல் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதால் ஆட்சி கலைந்தது.

    மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் காலூன்ற முடியாது.

    காவிரி மேலாண்மை வாரியம் என்பதை ஆணையம் என மாற்றியதால் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை. இது மத்திய அரசு செய்த மிகப்பெரிய துரோகம்.


    தமிழக முதல்வர் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகா புதிய அணைகள் கட்டுவது, அணை பாதுகாப்பு போன்ற வி‌ஷயங்கள் தமிழகத்துக்கு சாதகமாக இல்லை.

    காவிரி விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு சென்றால் தான் முழுமையான தண்ணீர் கிடைக்கும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #CauveryManagementBoard  #Cauveryissue #Vaiko

    காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
    திருவாரூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றி தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். சுப்ரீம் கோர்ட்டு அளித்த காவிரி தீர்ப்பை 48 மணி நேரத்தில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தினை உடனடியாக இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும். அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

    காவிரியில் இருந்து 2 வாரங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர்் திறக்க முடியும்.

    காவிரி நீர் பிரச்சினையால் 4 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம் தான். இதில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கவே கவனம் செலுத்தி வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திணிக்கிறது. அதனை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கவர்னர் என்பவர் மரியாதைக்குரியவர். அவர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், துணைத்தலைவர் செல்லதுரை, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். 
    ×